**VIMALATHITHYAN RAJA **@
News,Entertainment,Radio,Tv,Shoping,Apps Games,Movies,Automative Science,Tech,Agriculture
LOGO
Sunday, December 10, 2017
முத்து -
pearls
முத்து என்பது ஆபரணங்களில் பயன்படுத்தப்படும் ஒருவகைப் பொருளாகும்.தூத்துக்குடி பகுதியில் முத்து உற்பத்தி மிக அதிகமாகபதிவு
செய்யப்பட்டுள்ளன.பாண்டிய நாடு முத்துடைத்து என்று சாெல்லப்படுவதுண்டு.நம்
நாட்டில் முத்து வளர்ப்பு பற்றிய பயிற்சியை சி.எம்.எப்.ஆர்.ஐ வழங்குகிறது.முத்துபடுகைகளிலிருந்து ஆயிரக்கணக்கான சிப்பிகள்
எடுக்கப்படுகின்றன.ஒவ்வாெரு சிப்பிக்குள்ளும் ஒரு முத்து
உருவாகிறது.முத்து இருவாயில் மெல்லுடலி
உயிரினங்கள் சிலவற்றின் உடலினுள் உருவாகின்றன இது இயற்கையில் நீரில் வாழுகின்ற முசெல் (mussel) வகையைச் சேர்ந்த முத்துச்சிப்பி
போன்ற சில உயிரினங்களிலிருந்து பெறப்படுகின்றது. மிகப் பழங்
காலத்திலிருந்தே முத்து விரும்பி வாங்கப்படும் ஒன்றாக இருந்து வந்துள்ளது.
தமிழகத்திலும் பண்டைய பாண்டிநாடுமுத்துக்களுக்குப் பெயர் பெற்றது.
அங்கிருந்து ஐரோப்பாவுக்கும் முத்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது
அறியப்பட்டுள்ளது. முத்து பொதுவாக ஒரு இரத்தினக் கல்லாகவே கருதி
மதிக்கப்படுகிறது.
வெளியிலிருந்து
இவ்வுயிரினங்களின் உடலுக்குள் செல்லும் நுண்துகள்களினால் ஏற்படும்
உறுத்தலைக் குறைப்பதற்காக இவற்றிலிருந்து சுரக்கும் ஒருவகைப் பொருள்
அத்துணிக்கைகளின் மீது பூசப்படுகின்றது. இச் செயற்பாடே முத்து எனும் இந்தப்
பெறுமதி வாய்ந்த பொருளை உருவாக்குகின்றது. இவ்வாறு சுரக்கப் படுகின்ற
பதார்த்தம் அரகோனைட் அல்லது கல்சைட்போன்ற படிக வடிவிலுள்ள கால்சியம் கார்பனேட்டையும், கொன்சியோலின் எனப்படும் ஒரு வகைப் பசை போன்ற கரிம வேதிப்பொருள்
ஒன்றையும் கொண்ட கலவையாகும். நேக்கர் அல்லது முத்தின் தாய் என
அழைக்கப்படும் இப்பொருள் பல படைகளாக வெளித் துணிக்கை மீது
பூசப்படுகின்றது.முத்து அரிதாகக் கிடைக்கக்கூடிய விலைமதிப்புள்ள
நவரத்தினங்களில் ஒன்று.பெர்சிய வளைகுடா,செங்கடல்,கட்ச் வளைகுடா,மன்னார்
வளைகுடா,பாக் ஜல சந்தி பாேன்ற பல இடங்களில் விரவி
காணப்படுகின்றது.இந்தியாவில் காணப்படும் பியுஃபிகடா இனமே வணிக
முக்கியத்துவம் வாய்ந்தது.19 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை இயற்கையாக உருவாகும் முத்துக்களே பயன்பட்டன.
ஆட்கள் நீருக்குள் இறங்கி முத்துச்சிப்பிகளைச் சேகரிப்பார்கள்
No comments:
Post a Comment