LOGO

LOGO

Saturday, December 2, 2017

தமிழென்றால் கேவலமா? -- விமலாதித்தன் ராஜா

தமிழென்றால் கேவலமா? ஆங்கிலமென்றால் நாவெழுமோ? கோவணம் அரிசிப் படைக்க வேட்டிகள் நாட்டை பிடிக்கின்றன மழைத்துளி பொய்ப்பினும் மிகினும் அழியும் தேசம்,ஆகாயவாசம் செல்லும் அரசியல் தலைவனுக்கு பூமியிருக்கும் அருந்த செருப்புக்கரன் சிற்றெறும்புதான்,எப்படித் தோழனாக இருக்க முடியும்? ஆயினும் மேடை ஏறும் பொழுது பாட்டாளித் தோழா!! என்று கூவி அழைத்து கோமாளியாக்கி கோவணம் முடிந்ததையும் பிடுங்கிக்கொள்கிறான் கணிப்பொறிக்காரன் புரியாமல் படைத்து அறியாமலுருவி அயல்நாட்டில் குடியேற, செம்மறியாடு மேய்த்து சிறுகாசு சேர்த்து எருமையுடன் உருண்டு எள்ளுக்காய் குத்திக் கிழிக்க ரத்தமெல்லாம் நெட்ஒர்க் நிறுவனக்காரன் நோவாமல் பிடிங்குகிறான் ஆப்பர் திட்டத்தில், நாட்டுல சனத்துக்கு தெரிஞ்சது ரெண்டே படிப்பு படிப்பு மதிக்கிற ஒரே பொழப்பு அரசாங்க உத்தியோகம்
பெண்ணுக்கு மாப்பிள்ளை அடுத்த கிரகத்துல தேடி கிடைக்காம போவ எவனோ தேவாங்குக்கு கட்டி கொடுப்பானுங்க எவனும் விவசாய குடும்பத்தை மதிக்க மாட்டானுங்க  விளங்குமா தேசம் ?

No comments:

Post a Comment