LOGO

LOGO

Tuesday, December 19, 2017

சனி பெயர்ச்சி பலன்கள்

கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களைத் தருபவர்.நவகிரகங்களில் ஈஸ்வரப் பட்டம் பெற்றவர் சனீஸ்வர பகவான்தான்.இந்திரனே ஆனாலும் சனியின் பிடியில் இருந்து தப்பமுடியாது.சனீஸ்வர தோஷம் நீங்க செய்யவேண்டிய பரிகாரங்கள்:சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி வழிபட்டால் சனியின் பாதிப்புகள் குறையும்.திருநள்ளாறு சென்று, சனீஸ்வரரை வழிபடத் தோஷங்கள் நீங்கும்.நல்லெண்ணெய், உளுந்து, இரும்புச்சட்டி ஆகியவற்றை ஏழை, எளியோருக்கு தானம் செய்யலாம்.உழைப்பாளிகளுக்கு உதவி செய்தால், சனீஸ்வரனின் அனுகூலம் கிட்டும். அதேபோல ஏழை மாணவர்களின் கல்விக்காக உதவினாலும் சனிபகவான் மகிழ்ச்சி அடைவார்; நம் சங்கடங்களைப் போக்குவார்.சங்கடஹர சதுர்த்தி தினத்தில், விநாயகப் பெருமானுக்கு எட்டு சிதறு தேங்காய்களை உடைத்து வழிபட்டால், சனியின் பாதிப்புகள் குறையும்.
சனியின் நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்திரட்டாதி வரும் நாள்களில் அன்னதானம் செய்வது சிறப்பு.சனிபகவானின் தானியம் எள். அந்த எள் எண்ணெயில் (நல்லெண்ணெய்) அவருக்கு விளக்குப் போடுவது நன்மைகள் பலவற்றைத் தரும். எள்ளுச் சாதத்தை நைவேத்யமாக சனீஸ்வரருக்குச் செய்துவிட்டு, அதைக் காகத்துக்கு வைத்துவிட்டுச் சாப்பிட்டால் நன்மைகள் பெருகும்.சனிபகவானின் அதிபதியான மகாவிஷ்ணுவைப் பாராயணம் செய்தால், எண்ணற்ற நன்மைகளைப் பெறலாம். மேலும், சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ புண்ணிய தினத்தில் , சிவாலயங்களில் வில்வ இலையால் அர்ச்சனை செய்து வழிபடுவது சாலச்சிறந்தது.

No comments:

Post a Comment